என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..வைரல் ஆகும் ஹேஷ்டேக் "Shwetha "

0 988

கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்கள் அனைவரும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்புகளில், பாடம் கற்று வருகின்றனர். ஆனால் இந்த ஆன்லைன் வகுப்புகளில் நடக்கும் அலப்பறைகளுக்கு அளவே இல்லை.

டெல்லியைச் சேர்ந்த ஸ்வேதா என்ற மாணவி ஒருவர், ஆன்லைன் வகுப்பின்போது "மியூட்" செய்யாமல், சக தோழி ஒருவருக்கு போன் செய்து, தன் ஆண் தோழர் பற்றிய சீக்ரெட்டுகளை பேசி கதையடிக்க தொடங்கினார். இதனைத் தொடர்ந்து, ஆன்லைன் வகுப்பிலிருந்த மற்ற மாணவர்கள் பலரும் ஸ்வேதாவிடம், "மியூட்" செய்யும்படி கூறினர். ஆனால் கதையில் சுவாரசியமாக மூழ்கிய ஸ்வேதாவின் காதுகளில் அது விழவில்லை. கிட்டத்தட்ட 111 மாணவர்கள் இருந்த ஆன்லைன் வகுப்பில், ஸ்வேதா தன் ஆண் தோழர் பற்றிப் பேசி, கதையடித்த சம்பவம் இப்போது, ட்ரெண்டாகி உள்ளது. இதனை தொடர்ந்து, மீம் மன்னர்கள் பலரும் களத்தில் இறங்கி கலாய்க்க தொடங்கியுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments